நடந்து கொண்டிருந்தோம்..
ஊர் அடங்க தொடங்கி இருந்தது..
இரவு மெல்ல விழிக்க
பௌர்ணமி நிலவு துரத்த
நடந்து கொண்டிருந்தோம்..
சலசலத்த பேச்சு வாக்கியங்களாகி
வார்த்தைகளாகக் குறைய
நடந்து கொண்டிருந்தோம்
சாலை முட்ட சென்ற வாகனங்கள்
அருகி ஓன்றிரண்டாய்
சிவப்பு விளக்கும் மறுத்து செல்ல
நடந்து கொண்டிருந்தோம்
கடைசி பேருந்தும் கடந்து சென்றது
நாள் முழுக்க பாதங்களை சுமந்து
ஓய்ந்த ரயில் நிலைய படிக்கட்டுகள்
கொஞ்ச நேரம் எங்கள்
முதுகுகளையும் சுமந்தன..
நடந்து கொண்டிருந்தோம்
பதினேழு பதிமூண்றாகி
பதினோண்றானது
எங்கள் எண்ணிக்கை..
எங்களைத் துரத்திய நிலவும்
கண்ணாம் பூச்சி ஆட்டம் துவங்கியது
கும்மிருட்டில் கடந்து சென்றன
மூன்று பூங்காகளும்
ஒரு ஹைதராபாத் சாலையும்..
அடைந்தோம் மலையுச்சி பூங்காவை
உணர்ந்தோம்
துயில் மறுத்தது நாங்கள் மட்டுமல்ல
வேறு பல ஜோடிகளும் என்று..
காதலை வாழ்த்திவிட்டு
நடந்து கொண்டிருந்தோம்
இன்னூமொரு மலை முகட்டுப் பூங்கா
நடுநிசி
எங்களையும் எங்களையும் தவிர
வேறு எந்த சலனமும் இல்லை
அந்த நேரத்தில் அந்த இடத்தில்
உடற் பயிற்சி செய்யும்
வயோதிக தம்பதிகள்
சிலிர்த்து போன நாங்கள்
அவர்களூக்கு கால்கள் இருப்பதை
உறுதி செய்துவிட்டு
நடந்து கொண்டிருந்தோம்
மலை இறங்கினோம்
எண்வரானோம்
துறைமுகத்தின் வால் பிடித்து
நடந்து கொண்டிருந்தோம்
பழைய மலேயன் ரயில் நிலையம்
கம்பீரமாய் கடந்து சென்றது
சோர்வு கவ்வ துவங்கியது
தேநீர் தேடல் ஆரம்பம்.
கண்டோம் கழுவி கவிழ்க்க பட்ட
மெக்டனல்டை..
அந்த நேரத்திலும் கும்பலாய்
இளையர் கூட்டம்.
சுடுபான தெம்பில்
நடந்து கொண்டிருந்தோம்
முதல் பேருந்தும்
காவலர் ரோந்து காரும் கடந்து
சென்றன
லேசாய் தென்றல் வீசியது
நடந்து கொண்டிருந்தோம்
கரையோர பூங்காவும் வந்தது
காலைக் கடன் கழித்தோம்
வேகம் குறைய
நடந்து கொண்டிருந்தோம்
மெல்ல விடியலும் எட்டிப் பார்த்தது
அதிகாலை புகைப்பட வகுப்புகளுக்காக வரத்துவங்கினர்
ஓட்ட நடை பயிற்சியரும் வந்தனர்
சில காலை வணக்கங்களும்
பல புன்முறுவல்களும்
மெரினா நீர் தேக்கதை தாண்டி
நடந்து கொண்டிருந்தோம்
Monday, May 27, 2013
கூட்ஸ் பயணம்- எஸ். ராமகிருஷ்ணன்
எத்தனையோ ரயில்களில் ஏதேதோ ஊர்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன், ஆனால் என்னால் மறக்கமுடியாத ஒரு பயணம் கூட்ஸ் ரயிலில் போனது,
பள்ளிநாட்களில் வீட்டின் அருகாமையில் உள்ள ரயில்வே நிலையத்தினை கடந்து செல்லும் கூட்ஸ் ரயில்களை வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருப்பேன்,
அப்போதெல்லாம் கூட்ஸ் ரயிலின் கடைசிப்பெட்டியில் ஒற்றை ஆளாக நின்றபடியே கொடியை வீசி அசைக்கும் கார்டினைப் பார்த்து கையசைப்பது வழக்கம், ஒரு சிலர் பதிலுக்கு கையசைப்பார்கள், பலர் இறுக்கமான முகத்துடன் வெறித்து பார்த்தபடியே கடந்து போய்விடுவார்கள்,
இந்த உலகிலே மிகதனிமையானது கார்டு வேலை என்று தோன்றும், ரயில்களைப் போல வேகமாக செல்லாமல் கூட்ஸ் மெதுவாகவே செல்லும், அதிலும் பல இடங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்து போக ஒதுங்கி வழி விட்டு நிற்க வேண்டியிருக்கும், கூட்ஸ் ரயிலின் ஒசை பாசஸ்சர் ரயிலின் ஒசையை விட மாறுபட்டது, கூட்ஸ் ரயில் போவது வீட்டின் அறைகள் ஒன்றாக நகர்ந்து போவதைப் போன்றே தோன்றும்
கூட்ஸ் ரயிலை ஒட்டுகிறவராவது கடுமையாக வேலை செய்து கொண்டிருப்பார், கடைசி பெட்டியில் இந்த கார்டு என்ன தான் செய்வார், அவர் ஏன் வெள்ளை உடை அணிந்திருக்கிறார், ரயில் நிலையத்தில் கூட்ஸ் நிற்காத போது ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ஒருவர் நின்று கொண்டு வளையம் ஒன்றை வீசி எறிவார்கள், கார்ட் அதைச் சரியாக தனது கைகளுக்குள் எப்படி வாங்கி கொள்கிறார் என்று ஆச்சரியமாக பார்த்திருக்கிறேன்,
ஏனோ அந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருந்த்து, பேசாமல் ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு கூட்ஸ் ரயிலின் கடைசிப்பெட்டியில் அமர்ந்தபடியே நிம்மதியாகப் படித்துக் கொண்டிருக்கலாம் என நினைத்திருக்கிறேன்,
ரயிலில் ஏறிப்போவது போல கூட்ஸில் யாரும் ஏறிப்போய்விட முடியாது, அதுவே அதன்மீது கூடுதல் கவர்ச்சியை தந்திருந்தது, எப்படியாவது ஒரு நாள் கூட்ஸ் ரயிலில் அதுவும் கார்ட் கூடவே பயணம் செய்ய வேண்டும் என்று தோன்றியது, ஆனால் அதை எப்படி சாத்தியமாக்குவது என்று தெரியவேயில்லை,
கடந்து செல்லும் கூட்ஸ் ரயில் பெட்டிகளை எண்ணுவது சுவாரஸ்யமான பொழுது போக்கு, ஒரு நாளும் ஒரே போல எண்ணிக்கை கொண்ட இரண்டு கூட்ஸ் ரயில்கள் ஒடுவதேயில்லை என்பதே நான் கண்டறிந்த உண்மை, அதன்பிறகு கூட்ஸ் பெட்டிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை கொண்டு அதில் தானியம் ஏற்றிக் கொண்டு போகப்படுகிறதா, சிமெண்ட் மூடைகள் துறைமுகத்திற்கு போகிறதா என்பதை கூட கண்டுபிடிக்க பழகினேன்,
ஒருமுறை கடைசிபெட்டியில் ஒரு முக்காலி போட்டுக் கொண்டு இளவயது கார்டு ஒருவர் புத்தகம் படித்தபடியே போனது எனக்குள் இருந்த ஆசையை மேலும் கிளறிவிட்டது,
ரயில்வே நிலையத்தில் கூட்ஸ் வந்து நின்றிருந்த சமயம் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் அதனுள் ஏறி உள்ளே எப்படியிருக்கிறது என்று பார்த்தேன், அது ஒரு சிறிய அறை, உள்ளே கொடி வைப்பதற்காக சொருகு கம்பி, சிக்னல் விளக்கு, சிறிய கையடக்கமான நோட்டுகள், ஒரு விசில், மடக்கு நாற்காலி, ஒரு மரப்பெட்டி, டார்ச் லைட், இரும்பு கருவிகள் சில இவையே அதனுள்ளிருந்தன, கூட்ஸ் ஜன்னல் வழியாக வெளியுலகைப் பார்ப்பதற்கு விநோதமாகத் தெரிந்தது,
கூட்ஸ் ரயிலில் பயணம் செய்வதற்கு என்ன தான் வழி என்று பலரிடமும் கேட்டிருக்கிறேன், ஒருவராலும் உதவ முடிந்ததில்லை, கல்லூரி நாட்களின் போது பழனி என்றொரு நண்பன் அறிமுகமானான், அவனது அப்பா ரயில்வேயில் பணியாற்றுகிறார், அதுவும் தொழிற்சங்கவாதி என்றான், அவனது அப்பாவை அறிமுகம் செய்து வைக்கும்படியாக கேட்டுக் கொண்டேன்,
எனது ஆசையை அவனது அப்பாவிடம் சொன்னபோது இன்னும் சின்னபிள்ளையா இருக்கியேப்பா, கூட்ஸ் ரயில்ல போறதுல என்ன இருக்கு, வெறும் அலுப்பு, எனக்கு தெரிந்த தனராஜ்னு ஒரு கார்டு இருக்கார், அவர் கிட்ட கேட்டுப் பாக்குறேன், தூத்துக்குடி வரைக்கும் உன்னை கூட்டிகிட்டு போவார் என்றார்
அவர் சொல்லி பல மாதங்கள் ஆகியும் தனராஜ் என்னை அழைக்கவேயில்லை, தற்செயலாக ஒருநாள் இரவு பழனியின் அப்பா என்னை அழைத்து நாளைக்கு உன்னை கூட்டிகிட்டு போறேனு சொல்லியிருக்கார் என்றார்
அன்றிரவு என்னால் உறங்கவே முடியவில்லை, சட்டென வயது கரைந்து எனது பத்து வயதிற்குத் திரும்பிப் போய்விட்டதை போலவே உணர்ந்தேன், மறுநாள் காலை கூட்ஸ் ரயிலில் படிப்பதற்காக மாக்சிம் கார்க்கியின் சிறுகதைகளை கையில் எடுத்துக் கொண்டேன், கூட்ஸ் ரயில்களை பற்றி அற்புதமாக எழுதியவர் அவர் தானே,
தன்ராஜ் வீட்டிற்கு போன போது அவர் என்னை மதுரையை அடுத்த திருமங்கலம் ரயில் நிலையத்தில் போய் காத்திருக்கும்படியாகச் சொன்னார், உடனே டவுன் பஸ் பிடித்து திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு சென்று காத்துக் கொண்டிருந்தேன், கூட்ஸ் ரயில் எப்போது வரும் என்றே தெரியவில்லை, வெற்றுத் தண்டவாளங்களின் மீது காகங்கள் நடந்து கொண்டிருந்தன, வெயில் ஏறிய பத்து மணி அளவில் அந்தக் கூட்ஸ் மெதுவாக ரயில் வந்து நிற்கத் துவங்கியது,
தன்ராஜ் என்னை கையசைத்து ஏறிக் கொள்ளச் சொன்னார், கூட்ஸ் ரயிலினுள் ஏறி நின்று கொண்டேன், நான் ஆசைப்பட்டது இது தான் என்று சந்தோஷமாக இருந்தது., கூட்ஸ் மெதுவாகக் கிளம்பி சீராக செல்லத்துவங்கியது, கடைசி பெட்டியின் இரும்புக் கம்பிகளை பிடித்து நின்றபடியே தூரத்து மேகங்களை, வெட்டவெளியை, மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை, பின்னோடும் மரங்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன், ஒருமுறை கூட்ஸ் ரயில் இரவில் பழுதுபட்டு நின்று போன தனது அனுபவத்தை சொல்லிக் கொண்டே வந்தார் தனராஜ், காதில் கேட்டுக் கொண்டு வந்த போதும் எதுவும் மனதில் தங்கவேயில்லை,
கூட்ஸ் மிகவும் மெதுவாகப் போய் கொண்டிருந்தது, எங்காவது மூடிய ரயில்வே கேட்டிலோ, மரத்தில் ஏறி நின்றபடியோ என்னைப் போல சிறுவன் எவனாவது கூட்ஸ் ரயிலுக்கு கையசைப்பானா என்று ஆசையுடன் பார்த்துக் கொண்டேயிருந்தேன், ஒரு சிறுவனும் கண்ணில் படவேயில்லை, எதிர்த்து வீசி அடிக்கும் காற்றும், வெக்கையும் தூரத்து பனைகளின் ஒலை எழுப்பும் சப்தங்களும், வறண்ட ஆற்று பாலத்தினைக் கடக்கும் போது காணமுடிந்த ஒதுங்கி நின்ற கழுதையின் தோற்றமும், முடிவற்ற தண்டவாளங்களும் என்னை கிறங்கச் செய்திருந்தன,
இப்போது திடீரென மழை பெய்யக்கூடாதா , பெய்தால் கூட்ஸில் இருந்தபடியே மழையை வேடிக்கை பார்க்கும் அபூர்வ அனுபவத்தை பெற்றிருப்பேனே என்றெல்லாம் தோன்றியது
ஒரு யானை மீது அமர்ந்து போவது தரும் விநோத அனுபவம் போலவே கூட்ஸ் ரயிலின் பயணமிருந்தது, நான் ஆசைப்பட்டது போல அங்கே புத்தகம் படிக்க மனமே வரவில்லை, மாறாக கடந்துபோகும் நிலக்காட்சிகள், கூட்ஸின் முணுமுணுப்பு, அதன் லயமான இயக்கம் மேலாகவே கவனம் போய் கொணடிருந்தது,
என் கண்முன்னாடியே அவர் கொடியசைத்து ரயில்நிலையங்களைக் கடந்து போனார், கண்முன்னே அந்த இரும்பு வளையத்தினை கையில் வாங்கி என்னிடம் தந்தார், அவரது பணி ஒவ்வொரு ரயில் நிலையத்தினையும் கூட்ஸ் எத்தனை மணிக்கு கடந்து போனது, எங்கே நின்றது, என்று குறிப்புகளை எழுதுவது என்பதை நேரிலே கண்டு கொண்டேன், கூட்ஸிலிருந்த சரக்குகளை கவனமாக கொண்டு போய்சேர்க்கிற பொறுப்பு அவருடையது என்பதை பற்றி சொல்லிக் கொண்டே வந்தார், எல்லா வேலையும் போல இதுவும் ஒரு வேலை தான், வெயில்காலத்தில இதுல மனுசன் போக முடியாது என்றார்.
தூத்துக்குடி வரும்வரை நான் அமைதியாக வெளியுலகை வேடிக்கை பார்த்தபடியே வந்தேன், அவர் எதற்காக இந்தப் பையன் இப்படி அர்த்தமில்லாமல் கூட்ஸ் ரயிலில் பயணம் செய்ய ஆசைப்பட்டிருக்கிறான் என புரியாதவரை போலவே என்னை பார்த்துக் கொண்டு வந்தார்,
தூத்துக்குடியில் இறங்கியதும் அவர் என்னை அழைத்துக் கொண்டு போய் தேநீர் வாங்கி தந்தார், பிறகு நீ பஸ்ஸை பிடிச்சி வீடு போய் சேர் எனக்கு வேலை கிடக்கு என்றார்,
மாலையில் வீடு வந்து சேர்ந்த போது அம்மா எனது தோற்றத்தை பார்த்த மாத்திரம் கேட்டார்
ஏன் தலை மேல்காலு எல்லாம் புழுதி படிந்து போய் கிடக்கு, எங்கே போய் சுற்றிட்டு வர்றே
கூட்ஸ் ரயிலில் போய்வந்தேன் என்று நான் சொல்லவேயில்லை,
இன்றும் எங்காவது கூட்ஸ்ரயில் போவதைப் பார்க்கும் போது கடைசிப்பெட்டி மீதே கண்கள் போகின்றன, ஏனோ அந்த வசீகரம் குறையவேயில்லை
பள்ளிநாட்களில் வீட்டின் அருகாமையில் உள்ள ரயில்வே நிலையத்தினை கடந்து செல்லும் கூட்ஸ் ரயில்களை வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருப்பேன்,
அப்போதெல்லாம் கூட்ஸ் ரயிலின் கடைசிப்பெட்டியில் ஒற்றை ஆளாக நின்றபடியே கொடியை வீசி அசைக்கும் கார்டினைப் பார்த்து கையசைப்பது வழக்கம், ஒரு சிலர் பதிலுக்கு கையசைப்பார்கள், பலர் இறுக்கமான முகத்துடன் வெறித்து பார்த்தபடியே கடந்து போய்விடுவார்கள்,
இந்த உலகிலே மிகதனிமையானது கார்டு வேலை என்று தோன்றும், ரயில்களைப் போல வேகமாக செல்லாமல் கூட்ஸ் மெதுவாகவே செல்லும், அதிலும் பல இடங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்து போக ஒதுங்கி வழி விட்டு நிற்க வேண்டியிருக்கும், கூட்ஸ் ரயிலின் ஒசை பாசஸ்சர் ரயிலின் ஒசையை விட மாறுபட்டது, கூட்ஸ் ரயில் போவது வீட்டின் அறைகள் ஒன்றாக நகர்ந்து போவதைப் போன்றே தோன்றும்
கூட்ஸ் ரயிலை ஒட்டுகிறவராவது கடுமையாக வேலை செய்து கொண்டிருப்பார், கடைசி பெட்டியில் இந்த கார்டு என்ன தான் செய்வார், அவர் ஏன் வெள்ளை உடை அணிந்திருக்கிறார், ரயில் நிலையத்தில் கூட்ஸ் நிற்காத போது ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ஒருவர் நின்று கொண்டு வளையம் ஒன்றை வீசி எறிவார்கள், கார்ட் அதைச் சரியாக தனது கைகளுக்குள் எப்படி வாங்கி கொள்கிறார் என்று ஆச்சரியமாக பார்த்திருக்கிறேன்,
ஏனோ அந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருந்த்து, பேசாமல் ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு கூட்ஸ் ரயிலின் கடைசிப்பெட்டியில் அமர்ந்தபடியே நிம்மதியாகப் படித்துக் கொண்டிருக்கலாம் என நினைத்திருக்கிறேன்,
ரயிலில் ஏறிப்போவது போல கூட்ஸில் யாரும் ஏறிப்போய்விட முடியாது, அதுவே அதன்மீது கூடுதல் கவர்ச்சியை தந்திருந்தது, எப்படியாவது ஒரு நாள் கூட்ஸ் ரயிலில் அதுவும் கார்ட் கூடவே பயணம் செய்ய வேண்டும் என்று தோன்றியது, ஆனால் அதை எப்படி சாத்தியமாக்குவது என்று தெரியவேயில்லை,
கடந்து செல்லும் கூட்ஸ் ரயில் பெட்டிகளை எண்ணுவது சுவாரஸ்யமான பொழுது போக்கு, ஒரு நாளும் ஒரே போல எண்ணிக்கை கொண்ட இரண்டு கூட்ஸ் ரயில்கள் ஒடுவதேயில்லை என்பதே நான் கண்டறிந்த உண்மை, அதன்பிறகு கூட்ஸ் பெட்டிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை கொண்டு அதில் தானியம் ஏற்றிக் கொண்டு போகப்படுகிறதா, சிமெண்ட் மூடைகள் துறைமுகத்திற்கு போகிறதா என்பதை கூட கண்டுபிடிக்க பழகினேன்,
ஒருமுறை கடைசிபெட்டியில் ஒரு முக்காலி போட்டுக் கொண்டு இளவயது கார்டு ஒருவர் புத்தகம் படித்தபடியே போனது எனக்குள் இருந்த ஆசையை மேலும் கிளறிவிட்டது,
ரயில்வே நிலையத்தில் கூட்ஸ் வந்து நின்றிருந்த சமயம் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் அதனுள் ஏறி உள்ளே எப்படியிருக்கிறது என்று பார்த்தேன், அது ஒரு சிறிய அறை, உள்ளே கொடி வைப்பதற்காக சொருகு கம்பி, சிக்னல் விளக்கு, சிறிய கையடக்கமான நோட்டுகள், ஒரு விசில், மடக்கு நாற்காலி, ஒரு மரப்பெட்டி, டார்ச் லைட், இரும்பு கருவிகள் சில இவையே அதனுள்ளிருந்தன, கூட்ஸ் ஜன்னல் வழியாக வெளியுலகைப் பார்ப்பதற்கு விநோதமாகத் தெரிந்தது,
கூட்ஸ் ரயிலில் பயணம் செய்வதற்கு என்ன தான் வழி என்று பலரிடமும் கேட்டிருக்கிறேன், ஒருவராலும் உதவ முடிந்ததில்லை, கல்லூரி நாட்களின் போது பழனி என்றொரு நண்பன் அறிமுகமானான், அவனது அப்பா ரயில்வேயில் பணியாற்றுகிறார், அதுவும் தொழிற்சங்கவாதி என்றான், அவனது அப்பாவை அறிமுகம் செய்து வைக்கும்படியாக கேட்டுக் கொண்டேன்,
எனது ஆசையை அவனது அப்பாவிடம் சொன்னபோது இன்னும் சின்னபிள்ளையா இருக்கியேப்பா, கூட்ஸ் ரயில்ல போறதுல என்ன இருக்கு, வெறும் அலுப்பு, எனக்கு தெரிந்த தனராஜ்னு ஒரு கார்டு இருக்கார், அவர் கிட்ட கேட்டுப் பாக்குறேன், தூத்துக்குடி வரைக்கும் உன்னை கூட்டிகிட்டு போவார் என்றார்
அவர் சொல்லி பல மாதங்கள் ஆகியும் தனராஜ் என்னை அழைக்கவேயில்லை, தற்செயலாக ஒருநாள் இரவு பழனியின் அப்பா என்னை அழைத்து நாளைக்கு உன்னை கூட்டிகிட்டு போறேனு சொல்லியிருக்கார் என்றார்
அன்றிரவு என்னால் உறங்கவே முடியவில்லை, சட்டென வயது கரைந்து எனது பத்து வயதிற்குத் திரும்பிப் போய்விட்டதை போலவே உணர்ந்தேன், மறுநாள் காலை கூட்ஸ் ரயிலில் படிப்பதற்காக மாக்சிம் கார்க்கியின் சிறுகதைகளை கையில் எடுத்துக் கொண்டேன், கூட்ஸ் ரயில்களை பற்றி அற்புதமாக எழுதியவர் அவர் தானே,
தன்ராஜ் வீட்டிற்கு போன போது அவர் என்னை மதுரையை அடுத்த திருமங்கலம் ரயில் நிலையத்தில் போய் காத்திருக்கும்படியாகச் சொன்னார், உடனே டவுன் பஸ் பிடித்து திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு சென்று காத்துக் கொண்டிருந்தேன், கூட்ஸ் ரயில் எப்போது வரும் என்றே தெரியவில்லை, வெற்றுத் தண்டவாளங்களின் மீது காகங்கள் நடந்து கொண்டிருந்தன, வெயில் ஏறிய பத்து மணி அளவில் அந்தக் கூட்ஸ் மெதுவாக ரயில் வந்து நிற்கத் துவங்கியது,
தன்ராஜ் என்னை கையசைத்து ஏறிக் கொள்ளச் சொன்னார், கூட்ஸ் ரயிலினுள் ஏறி நின்று கொண்டேன், நான் ஆசைப்பட்டது இது தான் என்று சந்தோஷமாக இருந்தது., கூட்ஸ் மெதுவாகக் கிளம்பி சீராக செல்லத்துவங்கியது, கடைசி பெட்டியின் இரும்புக் கம்பிகளை பிடித்து நின்றபடியே தூரத்து மேகங்களை, வெட்டவெளியை, மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை, பின்னோடும் மரங்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன், ஒருமுறை கூட்ஸ் ரயில் இரவில் பழுதுபட்டு நின்று போன தனது அனுபவத்தை சொல்லிக் கொண்டே வந்தார் தனராஜ், காதில் கேட்டுக் கொண்டு வந்த போதும் எதுவும் மனதில் தங்கவேயில்லை,
கூட்ஸ் மிகவும் மெதுவாகப் போய் கொண்டிருந்தது, எங்காவது மூடிய ரயில்வே கேட்டிலோ, மரத்தில் ஏறி நின்றபடியோ என்னைப் போல சிறுவன் எவனாவது கூட்ஸ் ரயிலுக்கு கையசைப்பானா என்று ஆசையுடன் பார்த்துக் கொண்டேயிருந்தேன், ஒரு சிறுவனும் கண்ணில் படவேயில்லை, எதிர்த்து வீசி அடிக்கும் காற்றும், வெக்கையும் தூரத்து பனைகளின் ஒலை எழுப்பும் சப்தங்களும், வறண்ட ஆற்று பாலத்தினைக் கடக்கும் போது காணமுடிந்த ஒதுங்கி நின்ற கழுதையின் தோற்றமும், முடிவற்ற தண்டவாளங்களும் என்னை கிறங்கச் செய்திருந்தன,
இப்போது திடீரென மழை பெய்யக்கூடாதா , பெய்தால் கூட்ஸில் இருந்தபடியே மழையை வேடிக்கை பார்க்கும் அபூர்வ அனுபவத்தை பெற்றிருப்பேனே என்றெல்லாம் தோன்றியது
ஒரு யானை மீது அமர்ந்து போவது தரும் விநோத அனுபவம் போலவே கூட்ஸ் ரயிலின் பயணமிருந்தது, நான் ஆசைப்பட்டது போல அங்கே புத்தகம் படிக்க மனமே வரவில்லை, மாறாக கடந்துபோகும் நிலக்காட்சிகள், கூட்ஸின் முணுமுணுப்பு, அதன் லயமான இயக்கம் மேலாகவே கவனம் போய் கொணடிருந்தது,
என் கண்முன்னாடியே அவர் கொடியசைத்து ரயில்நிலையங்களைக் கடந்து போனார், கண்முன்னே அந்த இரும்பு வளையத்தினை கையில் வாங்கி என்னிடம் தந்தார், அவரது பணி ஒவ்வொரு ரயில் நிலையத்தினையும் கூட்ஸ் எத்தனை மணிக்கு கடந்து போனது, எங்கே நின்றது, என்று குறிப்புகளை எழுதுவது என்பதை நேரிலே கண்டு கொண்டேன், கூட்ஸிலிருந்த சரக்குகளை கவனமாக கொண்டு போய்சேர்க்கிற பொறுப்பு அவருடையது என்பதை பற்றி சொல்லிக் கொண்டே வந்தார், எல்லா வேலையும் போல இதுவும் ஒரு வேலை தான், வெயில்காலத்தில இதுல மனுசன் போக முடியாது என்றார்.
தூத்துக்குடி வரும்வரை நான் அமைதியாக வெளியுலகை வேடிக்கை பார்த்தபடியே வந்தேன், அவர் எதற்காக இந்தப் பையன் இப்படி அர்த்தமில்லாமல் கூட்ஸ் ரயிலில் பயணம் செய்ய ஆசைப்பட்டிருக்கிறான் என புரியாதவரை போலவே என்னை பார்த்துக் கொண்டு வந்தார்,
தூத்துக்குடியில் இறங்கியதும் அவர் என்னை அழைத்துக் கொண்டு போய் தேநீர் வாங்கி தந்தார், பிறகு நீ பஸ்ஸை பிடிச்சி வீடு போய் சேர் எனக்கு வேலை கிடக்கு என்றார்,
மாலையில் வீடு வந்து சேர்ந்த போது அம்மா எனது தோற்றத்தை பார்த்த மாத்திரம் கேட்டார்
ஏன் தலை மேல்காலு எல்லாம் புழுதி படிந்து போய் கிடக்கு, எங்கே போய் சுற்றிட்டு வர்றே
கூட்ஸ் ரயிலில் போய்வந்தேன் என்று நான் சொல்லவேயில்லை,
இன்றும் எங்காவது கூட்ஸ்ரயில் போவதைப் பார்க்கும் போது கடைசிப்பெட்டி மீதே கண்கள் போகின்றன, ஏனோ அந்த வசீகரம் குறையவேயில்லை
Saturday, May 25, 2013
அந்தக் காலம் நன்றாக இருந்தது! – கவிஞர் மகுடேஸ்வரன்
அந்தக் காலம்தான்
நன்றாக இருந்தது.
பேருந்துக்குள் கொணர்ந்து
மாலைமுரசு விற்பார்கள்.
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
அமர இடங்கிடைக்கும்.
மிதிவண்டி வைத்திருந்தோம்.
நான் பஞ்சர் ஒட்டப் பழகியிருந்தேன்.
எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தார்.
கலைஞரின் அறிக்கைகளைத் தேடிப் படித்தார்கள்.
எல்லா வீடுகளிலும்
முதல் மரியாதை பாடல் ஒலித்தது.
வானொலி நாடகங்களை
ரசித்துக் கேட்டோம்.
சாவி இதயம் பேசுகிறது
பத்திரிகைகள் வந்தன.
எல்லாருமே
அரசுப் பள்ளிகளில் படித்தோம்.
சாலையில்
எப்போதாவது ஒரு வண்டி போகும்.
மழை
நின்று நிதானமாகப் பொழியும்.
சாராயக் கடைகள் இருந்தன
இன்றைய கூட்டம் அக்கடைகளில் இருந்ததேயில்லை.
தமிழாசிரியர்கள்
தந்நிகரற்று விளங்கினார்கள்.
நல்ல நூல்களுக்கு
அன்னம் பதிப்பகம்தான்.
வேலைக்குப் போகாதவன்
எந்தக் குடும்பத்திற்கும் பாரமாயில்லை.
எளிதில்
மணப்பெண் கிடைத்தாள்.
வெஸ்ட் இண்டீசை
வெல்லவே முடியாது.
சந்தைக்குப் போக பத்து ரூபாய் போதும்.
முடிவெட்ட இரண்டு ரூபாய்தான்.
நகரத்தின் எல்லாக் கடைகளிலும்
மிரட்சியின்றி நுழைய முடியும்.
யுவதிகள் பாவாடை தாவணி உடுத்தினர்.
சிலிண்டர் மூடுதுணிபோல்
யாரும் நைட்டி அணியவில்லை.
ராமராஜனை
விரும்பி ரசித்தோம்.
அதிகாலைகள்
பறவைக் கீச்சுகளால் நிரம்பியிருந்தன.
புதுத்துணிகளை விஷேசங்களுக்கு என்று
உடுத்தாமல் வைத்திருந்தோம்.
ஊசல் சுவர்க்கடிகாரத்திற்கு
சாவி கொடுத்தோம்.
தானாய்த் துயில்களைந்து எழுந்தோம்.
இருள்கட்டியவுடன் உறங்கச் சென்றோம்.
ஆம்
அந்தக் காலம் நன்றாக இருந்தது !
-கவிஞர் மகுடேஸ்வரன்
நன்றாக இருந்தது.
பேருந்துக்குள் கொணர்ந்து
மாலைமுரசு விற்பார்கள்.
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
அமர இடங்கிடைக்கும்.
மிதிவண்டி வைத்திருந்தோம்.
நான் பஞ்சர் ஒட்டப் பழகியிருந்தேன்.
எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தார்.
கலைஞரின் அறிக்கைகளைத் தேடிப் படித்தார்கள்.
எல்லா வீடுகளிலும்
முதல் மரியாதை பாடல் ஒலித்தது.
வானொலி நாடகங்களை
ரசித்துக் கேட்டோம்.
சாவி இதயம் பேசுகிறது
பத்திரிகைகள் வந்தன.
எல்லாருமே
அரசுப் பள்ளிகளில் படித்தோம்.
சாலையில்
எப்போதாவது ஒரு வண்டி போகும்.
மழை
நின்று நிதானமாகப் பொழியும்.
சாராயக் கடைகள் இருந்தன
இன்றைய கூட்டம் அக்கடைகளில் இருந்ததேயில்லை.
தமிழாசிரியர்கள்
தந்நிகரற்று விளங்கினார்கள்.
நல்ல நூல்களுக்கு
அன்னம் பதிப்பகம்தான்.
வேலைக்குப் போகாதவன்
எந்தக் குடும்பத்திற்கும் பாரமாயில்லை.
எளிதில்
மணப்பெண் கிடைத்தாள்.
வெஸ்ட் இண்டீசை
வெல்லவே முடியாது.
சந்தைக்குப் போக பத்து ரூபாய் போதும்.
முடிவெட்ட இரண்டு ரூபாய்தான்.
நகரத்தின் எல்லாக் கடைகளிலும்
மிரட்சியின்றி நுழைய முடியும்.
யுவதிகள் பாவாடை தாவணி உடுத்தினர்.
சிலிண்டர் மூடுதுணிபோல்
யாரும் நைட்டி அணியவில்லை.
ராமராஜனை
விரும்பி ரசித்தோம்.
அதிகாலைகள்
பறவைக் கீச்சுகளால் நிரம்பியிருந்தன.
புதுத்துணிகளை விஷேசங்களுக்கு என்று
உடுத்தாமல் வைத்திருந்தோம்.
ஊசல் சுவர்க்கடிகாரத்திற்கு
சாவி கொடுத்தோம்.
தானாய்த் துயில்களைந்து எழுந்தோம்.
இருள்கட்டியவுடன் உறங்கச் சென்றோம்.
ஆம்
அந்தக் காலம் நன்றாக இருந்தது !
-கவிஞர் மகுடேஸ்வரன்
Friday, May 24, 2013
Saturday, May 11, 2013
Blog of sujatha award winner
http://www.nisaptham.com/?m=1
Writer sujatha memorial award winners blog.The author of this blog is awarded as the best internet writer.,
Writer sujatha memorial award winners blog.The author of this blog is awarded as the best internet writer.,
Wednesday, May 8, 2013
Subscribe to:
Comments (Atom)
