இதயத்தை
வெகுநாட்களாக
ஒரு மெல்லிய கவிதை
எழுத சொல்லி உறுத்தியது.
ஒருநாள்
அமைதியாக உட்கார்ந்து
வார்த்தைகளை
தேடிதேடி பொருத்தினேன்.
வெள்ளை காகிதத்தில்
ஒரு அழகிய கவிதை
முளைத்து வந்து
என்னை பார்த்து சிரித்தது.
ஆனால் . . .
ஆனால் . . . .
நான் நினைத்த கவிதை
இதுவல்ல.
பாவம்.
இதயத்தில் முளைத்த
அந்த மெல்லிய கவிதை
இதயத்திற்குள்ளேயே
ஒரு ஓரத்தில்
சுழன்று கொண்டே...
No comments:
Post a Comment