Thursday, September 13, 2012

எழுத நினைத்த கவிதை

இதயத்தை
வெகுநாட்களாக
ஒரு மெல்லிய கவிதை
எழுத சொல்லி உறுத்தியது.

ஒருநாள்
அமைதியாக உட்கார்ந்து
வார்த்தைகளை
தேடிதேடி பொருத்தினேன்.

வெள்ளை காகிதத்தில்
ஒரு அழகிய கவிதை
முளைத்து வந்து
என்னை பார்த்து சிரித்தது.

ஆனால் . . .
ஆனால் . . . .
நான் நினைத்த கவிதை
இதுவல்ல.

பாவம்.
இதயத்தில் முளைத்த
அந்த மெல்லிய கவிதை
இதயத்திற்குள்ளேயே
ஒரு ஓரத்தில்
சுழன்று கொண்டே...

No comments:

Post a Comment