Saturday, September 29, 2012

மத்யமன்


மத்யமன்
(சுஜாதாவின் மத்யமன் குறிப்புகளில் கவரப்பட்டு முயற்சித்தது)

பெரும்பான்மை நம்மில் நானும்
ஒருவன்...
மத்யமன்.

என் கவிதைகள் பிள்ளையார் சுழி தாண்டுவதில்லை

என் காதல் எப்போழுதும் சொல்லப்பட்டதில்லை

மழை எனக்கு எரிச்சல்
நிலவை சமீபத்தில் பார்ததில்லை

என் கனவுகள் அடுத்த சம்பள நாளைத் தாண்டியதில்லை..

என் மிகப் பெரிய சமுதாயக் கோவம்
போன வாரம் புது படத்திற்க்கு
வாங்கிய பிளாக் டிக்கெட்

செய்தித்தாளில் என்னை கவர்வது
இலவச பக்கங்களே...

அன்னா ஹசாரேயும் அணு உலையும்
எனக்கு சுவாரசியம் தருவதில்லை

என் தேச பக்தி கிரிக்கெட் வரை மட்டுமே

பெரும்பான்மை நம்மில் நானும்
ஒருவன்...
மத்யமன்.

இத்தணை குணத்திலும்

எங்கேயோ ஒரு சாலை விபத்தில்
யாரோ சிந்திய இரத்தம்
என் கண்ணில் ஏன் துளிர்த்தது ?

என்னுள் உறங்கும் உத்தமனை
என்க்கு காட்டிடவா?








No comments:

Post a Comment