நதியோரம் நாணல் வளைந்தாட கண்டேன் !
முழுமதி முகமது நீரினிலே நீந்த கண்டேன் !
வீசுகின்ற தென்றல் என் மேனி தழுவ நின்றேன் !
குட்டி முயலொன்று அங்கே துள்ளி ஓட கண்டேன் !
அது குறும்புடன் விளையாட கண்டேன் !
விபரீதம் புரியாமல் மெய் மறந்து நின்றேன் !
ஒளிந்திறந்த ஓநாய் ஓடி வர கண்டேன் !
வெள்ளை முயல் கொள்ளை போக கண்டேன் !
விழித்தெழுந்த நான் வியர்த்திருந்தேன் !
ஓநாய் என் கண் முன் ஒரு நொடி வந்து போனது !
எனை அறியாமல் என் கை
அருகில் உறங்கிக்கொண்டிருந்த
என் குழந்தையின் தலை வருடியது !
No comments:
Post a Comment