இந்த ரம்யமான உலகத்தில் எனக்கு ஒரு இடம் அளித்ததற்கு !
அதிகாலை குயிலின் பூபாளம் !
அந்தி நேர தென்றல் காற்று !
மகரந்தமாய் மணம் வீசும் மலர்கள் !
அன்னமென நடை பயிலும் நீரோடை !
மனதை வருடும் நிசப்தம் !
மெலிதாய் கேட்கும் மரங்களின் சல சலப்பு !
சோர்வில்லாமல் தாலாட்டும் அலைகள் !
வானமே எல்லையென சிறகடிக்கும் பறவைகள் !
சுறு சுறுப்பைச் சொல்லி கொடுக்கும் எறும்புகள் !
போராடக் கற்று கொடுக்கும் பூக்கள் !
விடா முயற்சியை வலியுறுத்தும் சிலந்தி !
உரிமை கோர கற்றுக்கொடுக்கும் விதைகள் !
எல்லாம் உனக்குத்தான் என்று சொல்லாமல் சொல்கிறது
ஏகாந்தமாய் விரிந்து கிடக்கும் வானம் !
ஒரு ரசிகனாய் எனக்கும் ஒரு இடம் அளித்ததற்கு நன்றி !
ஒரு நாள் வானம் வசப்படும் !
No comments:
Post a Comment